சிப்பாய் கலகம்-200: வேலூர் திப்பு மஹால் திறப்பு
வேலூர்:
வேலூரில் சிப்பாய் கலகம் நடந்ததன் 200மாவது ஆண்டு விழாவையொட்டிவேலூரில் உள்ள திப்பு மஹால் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது.
1800ம் ஆண்டுகளில்ஆங்கிலேய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியராணுவத்தினர் மீது விதித்தது. தாடி, மீசை வைக்கக் கூடாது, நெற்றியில் விபூசி பூசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வெள்ளையர் அரசு விதித்தது.இதை எதிர்த்து வேலூர் கோட்டையில், 1806ம் ஆண்டு வெள்ளையர் அரசைக்கண்டித்து இந்தியப் படையினர் கலகத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று இது வர்ணிக்கப்படுகிறது.
சிப்பாய் கலகம் நடந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வருகிற 10ம் தேதிவேலூர் கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிப்பாய் கலக நினைவுதபால் தலையை வெளியிடுகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று வேலூரில் உள்ள திப்பு மஹால் பொதுமக்கள்பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மேந்திர பிரசாத் யாதவ் திப்பு மஹாலைத் திறந்துவைத்தார். சிப்பாய் கலக நினைவு நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும்வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications