நழுவும் கருணாநிதி-பழ. நெடுமாறன் தாக்கு
சேலம்:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தனது கடமையிலிருந்து தமிழக முதல்வர்கருணாநிதி நழுவி வருகிறார் என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத்தமிழர் பேரமைப்பின் மாநாடு சமீபத்தில்சேலத்தில் நடந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட நெடுமாறன் பின்னர் இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.அப்போது அவர்கூறுகையில், இலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலைஎதுவோ, அதையே தமிழக அரசும் கடைப்பிடிக்கும் என்று முதல்வர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
நீண்ட நெடுங்காலமாக நிலவும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டியஅவசியத்தை மத்திய அரசிடம் எடுத்துரைத்து, இலங்கை தொடர்பான இந்தியாவின்கொள்கையை மாற்றிக் கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டியது தமிழகஅரசின் கடமையாகும்.
ஆனால் அந்தக் கடமையிலிருந்து நழுவி வருகிறார் முதல்வர் கருணாநிதி.சென்னை வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனை கருணாநிதிசந்தித்திருக்கக் கூடாது. மிக முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து, நாட்டின் மிக மூத்ததலைவருடன் விவாதிக்க ஒரு சாதாரண அதிகாரியை மத்திய அரசு அனுப்பிகருணாநிதியை அவமானப் படுத்தியுள்ளது.
ஈழப் பிரச்சினையில், இந்தியா ஆரம்பம் முதலே தவறான கொள்கையைத்தான்எடுத்துள்ளது. இப்பிரச்சினைக்ைகு உரிய முக்கியத்துவத்தை இந்தியாஅளிக்கவில்லை.
தற்போது இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்ல்பபட்டு வருகிறார்கள்.இதுகுறித்து உலக நாடுகள் கவலை தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாஇப்பிரச்சினை குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையை பிரதமர்மன்மோகன்சிங்தலைமையிலான மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான காலம் கனியும்என திடமாக நம்புகிறேன் என்று கூறினார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications