For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்- தினசரி உண்டியல் வருமானம் ரூ. 1 கோடி

By Staff
Google Oneindia Tamil News

திருப்பதி:

கடந்த 3 நாட்களாக திருப்பதியில் உண்டியல் வருமானம் ரூ. 3 கோடியைதாண்டியுள்ளது.

சனி, ஞாயிறைத் தொடர்ந்து சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விடுமுறைகள்வந்துவிட்டதால் கடந்த 5 நாட்களாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதிவருகிறது.

இதனால் கடந்த 3 நாட்களாக ஒவ்வொரு நாளும் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியை தாண்டிவிட்டது.

சனிக்கிழமை வசூல் ரூ.1 கோடியை தாண்டியது. ஞாயிற்றுக்கிழமை ரூ.1.65 கோடிவசூலானது.

திங்கள்கிழமை மகாலகு தரிசனம் எனப்படும் விரைவு தரிசனம் அமல்படுத்தியதில்சுமார் 60 கம்பார்டமெண்டுகளில் பக்தர்கள் காத்திருந்து பெருமாளை தரிசனம்செய்தனர். அன்று கோவில் உண்டியல் வருமானம் ரூ.1.1 கோடியாக இருந்தது.

தர்ம தரிசனத்துக்காக 78 மணி நேரமும், ரூ. 50 கட்டணம் செலுத்தி பெருமாளைதரிசிக்க 69 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.

சுதந்திர தினத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. திருமலைக்கு வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குபிறகே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X