தந்திரி வழக்கு: அப்ரூவர் ஆகிறார் அழகி சாந்தா
கொச்சி:
சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனருவை சிக்க வைக்க, விபச்சாரக்கும்பலின் தலைவி ஷோபா போட்ட சதித் திட்டத்திற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டஅழகி சாந்தாவை அப்ரூவர் ஆக்க போலீஸ் தரப்பு முயற்சித்து வருவதாகக்கூறப்படுகிறது.
கண்டரரு மோகனருவை விபச்சார அழகி சாந்தாவுடன் ஆபாச கோலத்தில் இருப்பதுபோல படம் எடுத்து அவரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் ஷோபா அவரதுகூட்டாளிகள் அனில், விஜில் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்த சதித் திட்டத்திற்கு மூளையாக இருந்தவர் என்று கூறப்படும் நடிகர் பெச்சுரஹ்மான் தலைமறைவாகி விட்டார். மேலும் கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 6பேரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களைக்கைது செய்ய போலீஸார் தீவிரநடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் விபச்சார அழகி சாந்தா எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல்இருந்து வருகிறது. அவர் போலீஸ் பிடியில்தான் இருப்பதாக கூறப்படுகிறது.தற்போதுஅவரை ஷோபவுக்கு எதிராக திருப்பி அப்ரூவர் ஆக்க போலீஸ் தரப்புமுயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஷோபா கடந்த 8ம தேதி எர்ணாகுளம நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல்செய்தார். அவருக்கு நீதிபதி நிபந்தனை ஜாமீன் வழங்கினார். ஆனால் இந்தஜாமீனுக்கு அடுத்த நாளே போலீஸார் தடை உத்தரவு பெற்றனர். இதனால்ஷோபாவால் வெளியே வர முடியாமல் போனது.
ஷோபா ஜாமீனில வெளியே வரக்கூடாது என்பதில் சில காவல்துறை அதிகாரிகள்மும்முரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணம், கைது செய்யப்பட்ட பின்னர்ஷோபா மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என்னுடன் தொடர்புவைத்திருந்த அத்தனை பேரின் முகமூடியையும் நான் ஜாமீனில வெளியே வந்துகிழிப்பேன் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.
ஷோபா வெளியே வந்தால் பல அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள்,முக்கியப் பிரமுகர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் ஷோபாவைவெளியே வர விடாமல் போலீஸ் தரப்பில ஜாமீனுக்கு தடை உத்தரவுபெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்படுவற்கு முன்பு வரை ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் நட்புகாரணமாகத் தான் விபச்சார விடுதியை மிக ஓபனாக நடத்தியும் கூட போலீஸ்பிடியிலிருந்து ஷோபா தப்பி வந்தார்.
விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது கூட போலீஸார் ஷோபாவை ராஜமரியாதைகொடுத்து உபசரித்துள்ளனர்.
இந் நிலையில்தான் ஷோபாவுக்கு செக் வைக்கும் வகையில் தங்களது பிடியில் உள்ளசாந்தாவை அப்ரூவர் ஆக்கி ஷோபா மீதான வழக்கை இறுக்க காவல்துறை முடிவுசெய்தது.
தற்போது தலைமறைவாக உள்ள பெச்சு ரஹ்மான், கூலிப்படையினர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சாந்தாவை வெளியில் கொண்டு வர போலீஸார் முடிவுசெய்துள்ளனர். இப்போதைக்கு போலீஸ் பாதுகாப்பிலேயே அவர் உள்ளதாகத்தெரிகிறது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications