For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டு கேட்டு வந்தால் டிவி கேளுங்கள்: வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஓட்டு கேட்டு வரும் திமுகவினரிடம் எங்கே இலவச கலர் டிவி என்று கேளுங்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை அயனாவரத்தில் மதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு வைகோ பேசுகையில், நூலிழையில் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 4லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுத்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்திருக்கிறது, ஆட்சியையும் பிடிக்கமுடிந்திருக்கிறது.

தள்ளாடும் அரசுதான் இங்கே அமைந்திருக்கிறது. நீங்கள் சொல்வது போல உங்களுக்கு கோடிக்கணக்கானமக்கள் ஆதரவு இருப்பதாக இருந்தால், மக்களே நேரடியாக மேயர்கள், நகராட்சித் தலைவர்களைதேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியது ஏன்?

எதற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தீர்கள்? கவுன்சிலர்கள் சேர்ந்து மேயர், நகராட்சித் தலைவர்களைதேர்ந்தெடுக்கும் முறை ஏன்? அப்பட்டமான ஒரு ஜனநாயகப் படுகொலையை செய்திருக்கிறீர்கள். இதற்கு ஒரேகாரணம், திமுக கூட்டணி படு பயங்கரமான தோல்வியை சந்திக்க வேண்டியிருக்க வேண்டும் என்ற பயம் தான்காரணம்.

கோடிக்கணக்கில் செலவு செய்து ஆள் பிடிக்கிற, குதிரை பேரம் பேசுகின்ற, மக்களால் கொடுக்காத வெற்றியைகுறுக்கு வழியில் பெற்றிடத்தான் இந்த திட்டம் என்று நான் கூறுகிறேன்.

சென்னை மாநகராட்சி அதிமுகவின் கோட்டை. இதை சட்டசபைத் தேர்தலில் நிரூபித்தோம். உள்ளாட்சித்தேர்தலிலும் இதை அதிமுக நிரூபிக்கும். ரிப்பன் மாளிகை அதிமுகவின் கோட்டையாக மாறும். மாநகராட்சிநிர்வாகத்தில் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கை, துயரம், கஷ்டம் இல்லாத வாழ்க்கை தேவை. அதை கொடுத்ததுஅதிமுக அரசு தான்.

சிக்குன் குனியா நோய் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வாரக்கணக்கில், மாதக் கணக்கில்வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். 250க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.ஆனால் திரும்பத் திரும்ப யாரும் சாகவில்லை என்கிறீர்கள்.

இறந்தவர்கள் பெயர்ப் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டால், அவர்களின் குடும்பத்தினரை மிரட்டுகிறார்கள்.யாரும் சாகவில்லை என்று மிரட்டி சொல்ல வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கு மனிதாபிமானமே கிடையாதா? இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொல்கிறேன், நீங்கள்கொடுக்கிற பாடம்தான் இந்த தருணம்.

வீட்டுக்கு வீடு கலர் டிவி தருவேன் என்றார்கள். மக்களே, திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் எங்கே கலர் டிவிஎன்று கேட்டு விரட்டுங்கள். வன்முறை மூலம் ஜனநாயக படுகொலை செய்ய நினைத்தால், அதை சந்திப்போம்.அதிமுக கூட்டணி பட்டாளம் அதையும் சந்திக்கும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X