தமிழகம் முழுவதும் கவுன்சிலர்கள் பதவியேற்பு
சென்னை:தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்டகவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரம் உள்ளாட்சி பதவியிடங்களுக்குசமீபத்தில் தேர்தல் நடந்தது. இரண்டு கட்டமாக நடந்த இந்தத் தேர்தலில்தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களுக்குமாநகராட்சி ஆணையர் விஜயக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதேபோல மதுரையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 கவுன்சிலர்களுக்கும்மாநகராட்சி ஆணையர் தினகரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜாமுத்தையா மன்றத்தில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல கோவை, திருச்சி, சேலம், நெல்லை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்,3ம் நிலை நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிலும் புதிய கவன்சிலர்கள்பதவியேற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications