சென்னை: மதிமுக கவுன்சிலரும் டிஸ்மிஸ்!
சென்னை:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கவுன்சிலராகப் பதவியேற்றதால் சென்னை மாநகராட்சியின் 40வது வார்டு மதிமுககவுன்சிலர் கன்னியப்பன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் மதிமுகவுக்கு 40வது வார்டில் மட்டுமே வெற்றி கிடைத்தது. மா. கன்னியப்பன்என்பவர் இந்த வார்டில் வெற்றி பெற்றார்.
அதிமுக பாணியில் இவரை ராஜினாமா செய்யுமாறு மதிமுக தலைமை கோரியது. ஆனால் அதை ஏற்ககன்னியப்பன் மறுத்து விட்டார். மாறாக, இன்று காலை அவர் மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்றார்.
இதையடுத்து கன்னியப்பனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரில் 2 பேர் ஜெயலலிதா உத்தரவுப்படி ராஜினாமா செய்தனர்.ஆனால் 2 பேர் ராஜினாமா செய்ய மறுத்து விட்டனர். இதனால் அவர்களை கட்சியை விட்டு தூக்கினார்ஜெயலலிதா. தற்போது அதே பாணியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், தனது கட்சிக்குக் கிடைத்தஒற்றை உறுப்பினரையும் கட்சியை விட்டு நீக்கி விட்டார்.
இதன் மூலம் அதிமுக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சென்னை மாநகராட்சியில் பிரதிநிதித்துவம் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications