மாணவனை விறகு கட்டையால் அடித்த ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

சென்னை:மாணவனை விறகுக் கட்டையால் அடித்ததாக கிறிஸ்தவ மிஷனரி பள்ளியின்ஆசிரியை, விடுதி வார்டன், உதவியாளர் ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்தவ மிஷனரி ஒன்றின் சார்பில் நடத்தப்படும் பள்ளிஉள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தங்கும் காப்பகமும் உள்ளது. இங்குஎண்ணூரைச் சேர்ந்த நேசராணி என்ற மீன் விற்கும் பெண்ணின் மகன் மோசஸ் (வயது11) படித்து வருகிறான்.

நேசராணி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில்,7வது வகுப்பு படிக்கும் தனது மகனை ஆசிரியை சுதா, தரையை சுத்தப்படுத்தபணித்துள்ளார். அதை சரியாக செய்யவில்லை என்று கூறி விறகுக் கட்டையால்அடித்துள்ளார். இதில் மோசஸுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. அவனை கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம்.

அந்த ஆசிரியை மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த விடுதிக் காப்பாளர்தேவசகாயராஜ், உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மாணவன்மோசஸ், மற்ற மாணவர்களின் சாப்பாட்டைப் பறிப்பது, ஆசிரியர்களை கிண்டல்செய்வது போன்ற சேட்டைகளில் ஈடுபட்டுள்ளான். அதைத் தட்டிக் கேட்கத்தான்ஆசிரியை சுதாவும், விடுதி வார்டன், உதவியாளர் ஆகியோர் சேர்ந்து அடித்தது தெரியவந்தது.

ஆனால், விறகு கட்டையால் மாணவனைத் தாக்கியது தவறு என்பதால் ஆசிரியைஉள்ளிட்ட 3 பேரையும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவின் போலீஸார்கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+