கருணாநிதி-ப.சிதம்பரம்: ஆளுக்கு 3 கோரிக்கை
சென்னை:சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டிலேயே நிதிஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதியிடம், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்உறுதியளித்தார்.
சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை அவரது இல்லத்தில்சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வரிடம் தனது சிவகங்கை நாடாளுமன்றத்தொகுதி தொசர்பாக 3 முக்கிய கோரிக்கைகளை வைத்தார் ப.சிதம்பரம்.
சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட் தாதுவை அடிப்படையாகக் கொண்டுஅங்கு கிராபைட் தொழிற்சாலையை அமைக்க வேண்டும். இது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் அபரிமிதமாக கிடக்ைகும் வேப்பங் கொட்டைகளைவைத்து உரத் தொழிற்சாலையை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் கண்டனூரில், தான் வழங்கிய 26 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள காதி,கிராம தொழில் வாரிய தொழிற்சாலைகளை மேம்படுத்தி புனரமைக்க வேண்டும்ஆகிய கோரிக்கைகளை முதல்வ>டம் சிதம்பரம் முன் வைத்தார். இந்தக்கோரிக்கைகளை ஏற்று உடனடி நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதி 3 முக்கிய கோரிக்கைகளை சிதம்பரத்ததிடம் முன்வைத்தார்.
சென்னை மாநகர குடிநீர்த் தேவைக்கான கடல் நீரைக் குடிநீராக்கும் 2 திட்டங்களுக்குவிரைவில் நிதியுதவி அளிக்க வேண்டும், ஊரக சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளைமேம்படுத்த நபார்டு நிறுவனத்திலிருந்து கூடுதல் நிதியுதவியைப் பெற்றுத் தரவேண்டும் என்று முதல்வர் கோ>க்கை விடுத்தார்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு இந்த நிதியாண்டுக்குள்ளேயே நிதியுதவிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் உறுதியளித்தார்.