For Daily Alerts
Just In
கொழும்பு: வேனில் குண்டு வெடித்து 2 பேர் காயம்
கொழும்பு:கொழும்பு புறநகரில் வேன் ஒன்றில் குண்டு வெடித்ததில் 2 பேர் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டாலா என்ற இடத்தில் இன்று காலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு வேனில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் வேன் டிரைவர் உள்ளிட்ட 2 பேர்காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி பிரசாத் சமரசிங்கே கூறுகையில், நிறுத்தப்பட்டிருந்த வேனில் குண்டு வெடித்ததுஎப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த குண்டுவெடிப்பு தற்கொலைப் படைத் தாக்குதல் முயற்சியா என்ற கோணத்திலும் ராணுவம் விசாரித்துவருகிறது.
Story first published: Tuesday, December 5, 2006, 5:30 [IST]