ஜெ.வின் ஆபிஸ்பாய் வைகோ: வெற்றிகொண்டான்
சென்னை:ஜெயலலிதாவின் ஆபிஸ் பாயாக பேசாமல் வைகோ வேலை பார்க்கலாம் என திமுக தலைமைக் கழக பேச்சாளர்வெற்றி கொண்டான் நக்கல் அடித்துள்ளார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசுகையில்,கோபால்சாமிக்கு (வைகோ) கொள்கை கெட்டுள்ளது. மதிமுகவை உடைக்க திமுக சதி செய்வதாக பிரதமர்,சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இவரது கடிதத்தைப் படிப்பதைத் தவிர வேறு இல்லையாஅவர்களுக்கு?
வைகோ சாட்டையை ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு பம்பரத்தை காணாமல் தேடி வருகிறார். அதிமுகவைஏலம் போட்டால் கூட இனிமேல் கட்சி நடத்த முடியாது. பேசாமல் அவர் வியாபாரம் செய்யப் போகலாம்.அவருக்கு ஆபிஸ் பாயாக வைகோ வேலை பார்க்கலாம்.
அதிமுக ஆட்சியில் என் மீது 69 வழக்குப் போட்டார்கள். கலைஞரை வீடு புகுந்து இழுத்துச் சென்றனர்.இப்போது நமது ஆட்சிதான். ஆனால் கலைஞர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா? இதனால் அவர் மீதுஎனக்கு கோபம்தான் என்றார் வெற்றி கொண்டான்.












Click it and Unblock the Notifications