அழகிரி கட் அவுட்: சு.சுவாமி வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:மதுரை நகரில் அளவுக்கு அதிகமாக அழகி>யின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுஇருப்பதாகவும், அவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைஎடுக்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

சுவாமி கூறுகையில், மதுரை நகரில் அழகிரிக்கு எங்கு பார்த்தாலும் கட் அவுட்கள்,பேனர்கள் வைத்துள்ளனர். பிளாட்பாரம், சாலை என எதையும் விடாமல் கட்அவுட்களை வைத்துள்ளனர்.

மாநகராட்சியிடம் அனுமதி பெறாமலேயே இத்தனை கட் அவுட்களையும்வைத்துள்ளனர். பெரிய பெரிய சைசில் இந்த கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிஆணையர் தினகரனிடம் புகார் கொடுத்துள்ளேன். அவரும் ஆவண செய்வதாககூறியுள்ளார். ஒருவேளை அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கட் அவுட்களைஅகற்ற சட்டரீதியான நடவடிக்கையை எடுப்பேன் என்றார் சுவாமி.

சமீபத்தில் அழகிரியை ராமர் போலவும், கிருஷ்ணர் போலவும் உருமாற்றி கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+