பஞ்சாப், உத்தரகண்ட் சட்டசபை தேர்தல்:பாஜக வெற்றி-காங்கிரஸ் படுதோல்வி
டெல்லி:பஞ்சாப், உத்தரகண்ட் (உத்தராஞ்சல்) மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூர்மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
பஞ்சாபில் பாஜக-சிரோமணி அகாலி தளம் கூட்டணி முன்னணியில் உள்ளது. மொத்தமுள்ள 117 இடங்களில் பாஜக கூட்டணி 65 இடங்களிலும்காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பிற இடங்களில் பாஜக கூட்டணியே முன்னணியில் உள்ளது.
70 இடங்கள் கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக 27 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் வென்றுள்ளன. பிற இடங்களிலும்பாஜகவே முன்னணியில் உள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளது.
அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் நவ்ஜோத் சிங் வெற்றி பெற்றார். கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்றதால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்த சித்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications