தாணு-சரண் வீடுகளில் வருமான வரி ரெய்ட்!
சென்னை:திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் டைரக்டர் சரண் வீட்டில் இன்று வருமான வரித் துறையின் சோதனை நடத்தினர்.
மிகப் பிரபலமான தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர் பிரமாண்டமான படங்களைத்தயாரித்தவர்.
| சமீபத்தில் விஜய்காந்தோடு சேர்ந்து வருமான வரி ரெய்டுக்குள்ளான ஜேபிஆருடன் தாணு |
தாணு தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் எஸ்.ஜே.சூர்யா, மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவாகியுள்ளதிருமகன், பாக்யராஜ் மகன் சாந்தனு நடிப்பில் உருவாகி வரும் சக்கரக்கட்டி ஆகியவை முக்கியமானவை.
சக்கரக்கட்டி படத்தை தாணுவின் மகன் கலா பிரபுவே இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் நல்ல அளவில் பிசினஸ் ஆகியுள்ளதாககூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தி.நகரில் உள்ள நடிகர் சங்கம் அருகே உள்ள தாணுவின் அலுவலகம், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ளஅவரது வீடு ஆகியவற்றில் இன்று பிற்பகல் திடீரென வருமான வரி சோதனை நடைபெற்றது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
அதே போல இயக்குனராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள இயக்குனர் சரண் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது.
வட்டாரம் படத்தை சமீபத்தில் தயாரித்து, இயக்கி வெளியிட்ட சரண் தற்போது முனி படத்தைத் தயாரித்து வருகிறார். ராஜ்கிரண், ராகவேந்திராலாரன்ஸ் நடித்து இயக்கும் இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், நல்ல பிசினஸ் ஆகியுள்ளதாகவும் கோடம்பாக்கம் வட்டாரத்தில்கூறப்படுகிறது.
இந் நிலையில் சரணின் ஆழ்வார்பேட்டை வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் விஜயகாந்த்தின் வீடுகள், இருப்பிடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியதுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் வைகோவுக்கு நெருக்கமான தாணு வீட்டில் ரெய்ட் நடக்கிறது.












Click it and Unblock the Notifications