வாழைப்பழ கதையும்-திமுக அரசின் திட்டங்களும்

Subscribe to Oneindia Tamil

கரூர்:வாழைப்பழ கதையாக, தினசரி ஒரு ஏமாற்றுத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து வருவதாக அதிமுக அமைப்புச் செயலாளர்கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கரூரில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் செங்கோட்டையன், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர்ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பேசுகையில், வாழைப்பழக் கதை போல, தினசரி ஒரு ஏமாற்றுத் திட்டத்தை திமுக அரசு அறிவித்து வருகிறது.ஆனால் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் ரூ. 100 கோடி மதிப்பிலானநலத் திட்ட உதவிகளை அதிமுக வழங்கியுள்ளது.

தற்போதைய அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. விரைவில் தேர்தல் வரும். ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையில் ஜெயலலிதாதான்முதல்வராக இருந்து தேசியக் கொடியை ஏற்றுவார் என்றார் செங்கோட்டையன்.

ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும்போது அரசு கஜானாவில் ரூ. 12 ஆயிரம் கோடியைவிட்டு விட்டுத்தான் போனார்.

ஆனால் இப்போதைய அரசு மாநில நிதி ஆதாரத்திலிருந்து ஒரு பைசாவைக் கூட இதுவரை மக்களுக்காக செலவிடவில்லை. நிறைவேற்றவேமுடியாத திட்டங்களை தொடர்ந்து கூறி வருகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+