இலங்கைக்கு பீடி கடத்திய 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

மண்டபம்:இலங்கைக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பீடிக் கட்டுக்களை கடத்த முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கியூ பிரிவு போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மண்டபம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில், சாக்கு மூட்டை ஒன்று வித்தியாசமாக இருந்ததைப் பார்த்து அதை நெருங்கிதிறந்து பார்த்தனர்.

அந்த சாக்குப் பையைப் பார்த்தபோது அதில் 42 பீடி பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. அந்த பீடிகளின் மதிப்புரூ. 2 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.

இந்தப் பீடி பண்டல்களை யார் பதுக்கி வைத்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது ராஜேந்திரன்என்பவர் சிக்கினார். இவர் தில்லைநாச்சியார் கோவில் குடியிருப்பைச் சேர்ந்தவர். பாத்திரங்களை வாடகைக்குக்கொடுக்கும் நிலையத்தை நடத்தி வருகிறார்.

இலங்கையில் பீடிக்கு நல்ல விலை கிடைப்பதால் பீடியை பதுக்கி கடத்தி விற்கவே இந்த பீடிக் கட்டுக்களை பதுக்கிவைத்திருந்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார். மேலும் இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், 15 ஆண்டுகளுக்குமுன்பு தமிழகம் வந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து ராஜேந்திரனை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த இலங்கை அகதியானதவராஜா, முருகன், இன்னொரு முருகன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+