காவலாளிக்கு அடி: 3 சிறார் கைதிகள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியைச் சேர்ந்த 3 சிறார் கைதிகள், பள்ளிக்கூட காவலாளியை அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
கடலூர் கடற்கரைச் சாலையில் 18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளுக்கான சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது.இங்கு பல்வேறு திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் பிடிபட்ட சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிக்கூட காவலாளி குமாரவேல் (வயது 48) தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது,பாபு என்கிற யாசிர் (17), சரவணன் (16), சதீஷ் (15) ஆகிய மூன்று பேரும் குமாரவேலை சுத்தியாலால்பலமாகத் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காயமடைந்த குமாரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தாக்கி விட்டுத் தப்பி ஓடிய 3 இளம்குற்றவாளிகளையும் போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications