நாடாளுமன்றத்தில் கதறியழுத பாஜக எம்பி!
டெல்லி:உத்தரப் பிரதேச முலாயம் சிங் அரசு தன்னை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து சித்திரவதை செய்வதாகவும் தனக்கு மத்திய அரசு பாதுகாப்புஅளிக்காவிட்டால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுனில் மகதோ எம்பிக்கு ஏற்பட்ட கதி தான் (சுட்டுக் கொல்லப்பட்டது) தனக்கும் ஏற்படும் என்று கூறிநாடாளுமன்றத்தில் பாஜக எம்பி கண்ணீர் விட்டு அழுது பரபரப்பை ஏற்படுத்தினார்.
![]() |
உத்தரப் பிரதேசம் கோரக்பூர் தொகுதி எம்பியாந யோகி ஆதித்ய நாத் மீது அமைதியை குலைக்கும் விதமாக நடந்து கொண்டதாக கடந்த ஜனவரி26ம் தேதி உபி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
11 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்த யோகி நாடாளுமன்றத்தில் பேசுகையில்,
உத்தரப் பிரதேச போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால், எதற்காக கைது செய்தனர் என்பதை தெரிவிக்கவில்லை. சட்டப்படி ஒருவரை கைதுசெய்த 24 மணி நேரத்தில், அவர் மீது எப்ஐஆர் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், என்னை கைது செய்த போலீசார் 7 நாட்கள் வரை எப்ஐஆர்பதிவு செய்யவில்லை.
![]() |
என்னை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டதால், கோபமடைந்து என் மீது போலியான குற்றச்சாட்டுகளை போலீசார்அடுக்கடுக்காக பதிவு செய்தனர்.
மக்களுக்கு பாடுபட சன்னியாசம் பூண்டுவிட்டவன் நான். ஆனால், மக்களின் அமைதியை குலைக்கும் விதமாக நடந்துகொண்டேன் என்று கூறிகைது செய்யப்பட்டேன்.
மத்திய அரசு தான் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.பி. சுனில் மகதோ சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற நிலைமை தான் எனக்கும் ஏற்படும். எனக்கு பாதுகாப்பு கொடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்என்றார்.
பேசும்போதே அவர் கதறி அழுதார். தனது உடையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே தான் அவர் பேசினார்.
இது குறித்து ஆராய்வதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உறுதியளித்தார்.














Click it and Unblock the Notifications