முதலில் பொது மாணவர் சேர்க்கை;ஓபிசி மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு!
டெல்லி:ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பொது மற்றும் எஸ்.சி., எஸ்.டி மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்துவது, பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் சேர்க்கையை உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் மேற்கொள்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் நேற்று மாலை இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடது சாரித் தலைவர்கள் ஆலோனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கடந்த ஆண்டைப் போலவே இப்போது மாணவர் சேர்க்கையை நடத்துவது (அதாவது பொது மற்றும் எஸ்.சி, எஸ்.டி மாணவர் சேர்க்கை), உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவது என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் தெரிவித்த ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த யோசனைக்கு திமுக சார்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பாமக சார்பில் கலந்து கொண்ட அன்புமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த யோசனையை தங்களது கட்சிகள் அடிப்படையிலேயே எதிர்ப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் அரசுத் தரப்பில் இந்தத் திட்டத்தை ஏற்குமாறு கூட்டணிக் கட்சிகளுக்கும், இடது சாரிக் கட்சிகளுக்கும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து ஆட்சேபனையுடன் இதை ஏற்பதாக திமுக, பாமக ஆகிய கட்சிகள் தெரிவித்தன.
அனைத்துக் கட்சிகளும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
கைக்கு வரும் சம்பளம் குறைகிறதா? புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்தது.. என்னென்ன மாறும்? -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்!












Click it and Unblock the Notifications