தினகரன் தாக்குதல்: மேலும் 2 பேர் கைது
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இருவருடன், இவர்களையும் சேர்த்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் நேற்று தினகரன், சன் டிவி அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஒத்தக்கடை போலீஸார் நேற்று இரவு டைகர் பாண்டி (27), பாட்ஷா (40) ஆகியோரைக் கைது செய்தனர். இன்று அதிகாலை சரவணன் (27), பிரபு (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நான்கு பேரும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
முன்னதாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் தினகரன் நாளிதழ் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில், மு.க.அழகிரி, மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், அவரது கணவர் கோபிநாதன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, மண்டலத் தலைவர் மாணிக்கம், முன்னாள் திமுக தொண்டர் அணி செயலாளர் சரவணன், கவுன்சிலர் அருண்குமார், பொன் சேதுராமலிங்கம், சிங்கத்தேவன், அவரது மகன் ராஜா, அட்டாக் பாண்டி, பீபிகுளம் குட்டை ரவி, பெயிண்டர் முத்துராமன், மாயா உள்ளிட்டோரின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இதில் நான்கு பேரை மட்டுமே போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையிலும் அழகிரி பெயர் இடம் பெறவில்லை.செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய கொலை வெறித் தாண்டவத்திற்குப் பின்னர் இன்று மதுரையில் பொதுவாக அமைதி நிலவுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications