For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துணை நடிகையிடம் சிக்கய கணவன்:மீட்டு தர கோரி மனைவி போலீசில் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சினிமா துணை நடிகையிடம் இருந்து தனது கணவனை மீட்டு தர வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளர்.

சென்னை கிண்டியை சேர்ந்தவர் துளசிதேவி (32). இவரது கணவர் வேணு. இவர்களுக்கு நிவேதா (18), ராகினி (8) என்ற மகள்கள் உள்ளனர்.

Thulasi Devi

இந்நிலையில் துளசிதேவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் ஒன்றை கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

எனது கனவர் வேணு. எனக்கும் அவருக்கும் கடந்த 1991ம் ஆண்டு திருமணம் ஆனாது. நாங்கள் சந்தேசமாக குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Thulasi Devi with Childrens

இந் நிலையில் எனது கணவருக்கும் சினிமா துணை நடிகை சத்யவாணி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் எனது கணவர் சில வாரங்களாக வீட்டிற்கே வருவதில்லை.

இதுகுறித்து எனது தாயிடமும், தம்பியிடமும் கூறினேன். அவர்கள் இருவரும் சத்யவாணியிடம் சென்று நியாயம் கேட்டனர். அப்போது அவர் எனது தாயை கேவலமான வார்த்தையால் திட்டியுள்ளார்.

மேலும் ரவடிகளை வைத்து எனது மகள்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் சத்யவாணியிடம் இருக்கும் எனது கணவரை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் சத்யவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X