கோ.சி.மணிக்கு மீண்டும் கூட்டுறவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:அமைச்சர் கோ.சி.மணியின் உடல் நிலை பூரண குணமடைந்ததால் அவரிடம் கூட்டுறவுத் துறை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
![]() |
திமுக அமைச்சரவையில் இடம் பெற்ற கோ.சி.மணிக்கு கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை ஒதுக்கப்பட்டது. சமீபத்தில் மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் கூடடுறவுத்துறை ஏ.வ.வேலுவுக்கு ஒதுக்கப்பட்டது. புள்ளியியல் துறையை மட்டும் கோ.சி.மணி கவனித்து வந்தார்.
இந்த நிலையில் கோ.சி. மணி பூரண குணமடைந்து விட்டார். இதையடுத்து மீண்டும் அவரிடம் கூட்டுறவுத் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் ஆலோசனைக்கேற்ப இதுவரை அமைச்சர் வேலுவின் பொறுப்பில் இருந்த கூட்டுறவுத் துறை, புள்ளியியல் துறை அமைச்சர் கோ.சி.மணியிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications