உளுந்தூர்பேட்டை: இரு அரசு பஸ்கள் மோதலில் 8 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.
கோவையிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே போல சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு அரசுப் பேருந்து எதிர் திசையில் வந்தது. அதிகாலை 3.45 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே ஏ.புத்தூர் என்ற இடத்தில் இரு பஸ்களும் பயங்கர வேரத்தில் நேருக்கு நேரில் மோதிக் கொண்டனர்.
இதில் இரண்டு பஸ் டிரைவர்களும் பலியாகிவிட்டனர். பஸ்களில் பயணம் செய்த 6 பயணிகளும் இறந்தனர். மேலும் 26 பயணிகள் படுகாயமடைந்தனர்.
காயம்டைந்தவர்கள் விழுப்புரம், சென்னை, புதுவை மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications