எண்கெளன்டர் பயத்தில் ரெளடிகள்-லாட்ஜுகளில் பதுங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகம் முழுவதும் ரெளடிகளை எண்கெளண்டர் பயம் பிடித்து ஆட்ட ஆரம்பித்துள்ளது.
பல ரெளடிகளும் ஒன்று ஊரை விட்டு ஓடி வேறு மாநிலத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர் அல்லது வீடுகளிலோ, வழக்கமாக தங்கும் இடங்களிலோ இருக்காமல் லாட்ஜுகளில் போய் பதுங்கி வருகின்றனர்.
இது குறித்து உளவுப் பிரிவினர் தந்த தகவலின்படி விடுதிகளில் போலீசார் ரெய்ட் நடத்தி வருகின்றர்.
இந்த ரெய்டில் சென்னையில் மட்டும் 500 ரெளடிகள் சிக்கியுள்ளனர்.
எழும்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், அண்ணாநகர் உள்பட சென்னையின் பல பகுதிகளிலும் உள்ள லாட்ஜுகளில் இரவில் சோதனை நடந்தது.
இதில் வட சென்னையின் பிரபல ரெளடி தங்கராஜ் உள்பட சுமார் 500 பேர் பிடிபட்டுள்ளனர்.
இந்த ரெய்டுகள் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications