திடீர் கோளாறு: போர்ட்பிளேர் வரை போய்தரையிறங்காமல் சென்னை திரும்பிய விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்குச் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து போர்ட் பிளேர் வரை போன விமானம் சென்னைக்கே மீண்டும் திரும்பி வந்தது.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐசி 549 விமானம் 124 பயணிகளுடன் இன்று காலை 5.45 மணிக்கு போர்ட்பிளேருக்குக் கிளம்பியது.
போர்ட்பிளேரை அடைந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னைக்குத் திருப்பப்பட்டது. இதனால் 6.50 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பி வந்தது அந்த விமானம்.
பயணிகளை கீழே இறக்காமல் விமானத்தில் ஏற்பட்டிருந்த பழுது சரி பார்க்கப்பட்டது. அதன் பின்னர் காலை 9.20 மணிக்கு மீண்டும் போர்ட் பிளேர் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications