ரப்சஞ்சானி படித்த கல்லூரியில்br/ஹைதராபாத் போலீஸார் விசாரணை
வேலூர்:
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை, ஹைதராபாத் போலீஸார் வேலூர் கொண்டு வந்து அவர் படித்து வந்த கல்லூரியில் விசாரணை நடத்தினர். அவர் தங்கியிருந்த வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியில் படித்து வந்த வங்கதேச மாணவி ரப்சஞ்சானியை ஹைதாராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள போலீஸார் இன்று காலை அவரை வேலூருக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் படித்து வந்த ஆக்ஸீலியம் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கல்லூரி முதல்வர் மற்றும் ரப்சஞ்சானியுடன் படித்த மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கல்லூரியிலிருந்து சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து ரப்சஞ்சானியை அவர் தங்கியிருந்த கோபால்புரம் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வீட்டு உரிமையாளரிடமும் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications