குற்றாலநாதர் கோவிலில் ரூ.1 கோடியில் திருப்பணி
குற்றாலம்:
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாதர் கோவிலில் ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்படவுள்ளன.
பொதிகை மலைச் சாரலில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில், குறுமுனி அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இங்கு கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மீண்டும் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக திருப்பணி குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் குற்றாலநாதர் கோவில் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதில் குற்றாலநாதர் கோவில், செண்பகாதேவி அம்மன் கோவில், சித்திர சபை, வரசித்தி விநாயகர் கோவில், குற்றால நங்கை கோவில் ஆகியவற்றில் உள்ள கோபுரங்களை புதுப்பித்தல், விமானங்களுக்கு பெயிண்டிங் செய்தல், மர வேலைகள், கொடி மரம் புதுப்பித்தல், தேர்கள் சீரமைத்தல் ஆகிய திருப்பணிகளை ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வது என்றும், திருப்பணிகளை விரைவில் முடித்து தை மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications