கருணாநிதி-அத்வானி மீது சரத்குமார் தாக்கு
சென்னை:
ராமன் குடிகாரன் என்று வால்மீகி சொல்லியிருப்பதாக கூறி, இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்திவிட்ட முதல்வர் கருணாநிதி அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
சேது கால்வாய் அமைக்க மாற்று வழி இருந்தால், அதை செயல்படுத்த வேண்டும். மத உணர்வுக்கு மதிப்பளிக்க வேணடும். இந்தத் திட்டத்தில் மாற்று பாதையை பலரும் கோரி வரும் நிலையில், அதை எதிர்க்கவில்லை என்று முதல்வர் சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்று சொல்லும் முதல்வர், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை சொல்லி இருக்கிறார். மதச் சர்ச்சையில் அரசியல்வாதிகள் ஈடுபடுவது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.
இன்று ராமர் இல்லை என்று சொல்வார். நாளை முருகக் கடவுள் யார், அவர் எப்படி மயில் வாகனத்தில் பறக்க முடியும், எப்படி பிள்ளையாருக்கு எலி வாகனமாக இருக்க முடியும். ஐயப்பன் ஏன் குன்றின் மீது இருக்கிறார். வெங்கடாஜலபதியின் பூர்வீகம் என்ன என்றெல்லாம் கேட்பார். இது தான் அரசியல் ஞானமா
ராமன் குடிகாரன் என்று நான் சொல்லவில்லை, வால்மீகி சொல்லியிருக்கிறார். அதை மேடையில் விவாதிக்க அத்வானி தயாரா என்று கருணாநிதி கேட்கிறார். இந்து என்றால் திருடன் என்று சொல்லியிருக்கிறார். ராமாயணத்தில் மது என்பதற்கு தேன் என்று அர்த்தமாகும்.
இந்த விவாதத்தை அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடத்தினால் நானும் மற்றவர்களும் பொது மேடையில் விவாதிக்கலாம்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் திமுகவில் இருக்க வேண்டாம் என்று முதல்வர் சொல்லட்டும். மூடநம்பிக்கை உள்ளவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் சொல்லட்டும் பார்ப்போம்.
ஒட்டுமொத்த இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல், ராமரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் குறித்து முதல்ர் கருணாநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
பாஜகவும் மதத்தை வைத்து அரசியல் நடத்துகின்றது. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி, பாஜக மூத்தத் தலைவர் அத்வானி இருவரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று சரத்குமார் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications