பேருந்து மோதி அகதி பள்ளி மாணவி பலி
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி அருகே பள்ளிக்கு செல்வதற்கு காத்திருந்த மாணவி பேருந்து மோதி இறந்தார்.
பழனி புளியம்பட்டி அருகே உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகள் மரியா. இவர் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக பழனியிருந்து திருப்பூர் செல்லும் ஒரு தனியார் பேருந்து, மாணவி மரியா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த டிஎஸ்பி சந்திரசேகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications