மதுரை, கோவையில் கல்வீச்சு - பதட்டம்
மதுரை& கோவை:
சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் உண்ணாவிரதம் நடத்திய நிலையில் கோவை மற்றும் மதுரையில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
மதுரையில் வணிக வளாக பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பல பேருந்துகள் சேதமடைந்தன. இதையடுத்து தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
இதனால் மதுரை முழுவதும் ஒரு பேருந்தும் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
கோவையில்..
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடச்சொல்லி ஒரு கும்பல் வற்புறுத்தியது. திடீரென்று அவர்கள் திறந்திருந்த கடைகள் மீது கல்வீச்சு நடத்தியதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
கருரில் ரோட்டை மறித்து உண்ணாவிரதம்:
கருரில் ரோட்டை வழி மறித்து திமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கருர் பஸ் நிலையம் அருகில் கோவை ரோட்டை வழிமறித்து பிரமாண்ட உண்ணாவிரத பந்தல் போடப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கரூரில் கடைகள், ஹோட்டல்கள், மெடிக்கல் ஷாப்கள், பால் வழங்கும் நிலையங்கள்,பெட்ரோல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு, தனியார் பஸ்கள் ஒடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.












Click it and Unblock the Notifications