திருச்சி தொழிலதிபருக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி:
திருச்சி தொழிலாதிபரிடம் ரூ.25 லட்சம் கேட்டு அல் கொய்தா பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருச்சி சிங்காரதோப்பு பகுதியில் நியூ கோல்டன் மஹால் உள்ளது. இதன் உரிமையாளர் சிராஜூதீன். இவருக்கு மர்ம கடிதம் வந்துள்ளது. அல் கொய்தா அமைப்பின் பெயரில் எழுதப்பட்டிருந்த இந்த கடிதத்தில் ரூ.25 லட்சம் பணம்தர வேண்டும். இல்லாவிட்டால் வெடிகுண்டு வைத்துக் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழில் அதிபர் சிராஜூதீன் திருச்சி மாநகர போலீஸ கமிஷனரிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோல்டன் மஹாலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு ஏற்கனவே இருமுறை அல் கொய்தா பெயரில் மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் வந்துள்ளது திருச்சி காவல்துறையை அதிர வைத்துள்ளது.