துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலிப்படை தலைவன்
திருநெல்வேலி:
நெல்லையில் துப்பாக்கியுடன் பிடிபட்ட கூலிப்படை தலைவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, திருத்து என்ற பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். நெல்லை குறுக்குதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டில் குடியிருந்து வரும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரும் டவுணைச் சேர்ந்த மற்றொரு மணிகண்டனும் நண்பர்கள். இவர்கள் கூலிப்படையாக செயல்பட்டதுடன், வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் திருத்து மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. பாளை மகாராஜா நகர் ஐ.ஓ.பி காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற விவசாய அதிகாரி ஆனந்த் கொலையில் மணிகண்டனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் நெல்லையை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications