ராகுலுக்கு சோனியா அட்வைஸ்
டெல்லி:
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எனது மகனுமான ராகுல்காந்தி கடினமாக உழைத்தால் மட்டுமே அரசியலில் உயரிய நிலையை எட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ராகுல் திடீரென கட்சியில் உயர் பதவிக்கு வந்து விடவில்லை. வரவும் முடியாது. உயரிய நிலையை அடைய அவர் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் அரசியலிலும், அரசிலும் அவர் உயர் பதவிகளை அடைய முடியும். தனது திறமையை அவர் நிரூபிக்க வேண்டும்.
அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து அவர் வந்திருப்பதால் நிச்சயம் அரசியலில் அவரது பங்கு வேகமானதாகவே இருந்தது. அதேசமயம், அதையே அவர் பயன்படுத்திக் கொண்டு உயர் பதவிகளை அடைந்து விட முடியாது.
தீவிர அரசியலுக்கு வந்த பின்னர் 3 ஆண்டுகள் கழித்துத்தான் அவருக்குப் பதவி கிடைத்துள்ளது. அதுவும் உ.பி. தேர்தலில் அவர் சீரிய முறையில் பங்கேற்று பிரசாரம் செய்ததற்காகத்தான் கிடைத்தது என்றார் சோனியா.
சமீபத்தில் தான் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications