திருடர்கள்-நெல்லையில் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
திருநெல்வேலி: தீபாவளி திருடர்களை பிடிப்பதற்காக நெல்லை நகரில் குளோஸ் சர்க்யூட் கேமரா அமைக்கப்பட்ட சிறிது நேரத்தில் நகை பறிக்க முயன்ற இரு பெண்கள் போலீசாரிடம் சிக்கினர்.
தீபாவளியை ஒட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் திருடர்கள் தொல்லையும் அதிகிரத்துள்ளது.
இதைத் தடுக்க நெல்லை காவல்துறை டவுன் வடக்கு ரத வீதியில் சிறப்பு பூத் அமைத்துள்ளனர். இைத காவல்துறை ஆணையாளர் மஞ்சுநாதா நேற்று திறந்து வைத்தார். இந்த பூத்திற்குள் போலீஸ் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் பொறுத்தப்பட்டு, இந்த பூத்தில் உள்ள ஸ்கிரீன்கள் மூலம் கண்காணிப்பு நடக்கிறது.
இந் நிலையில் நெல்லை கடைவீதியில் நேற்று துணி எடுகக வந்த ஒரு பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற இரு பெண்களை போலீசார் கேமரா மூலம் கண்காணித்து, உடனடியாக அங்கு ரோந்தில் ஈடுபட்ட போலீசாரை அலர்ட் செய்து பிடித்தனர்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் நாகர்கோவிலை சேர்ந்த ருக்மணி, லட்சுமி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். கேமராக்கள் அமைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் இவர்கள் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications