கிருஷ்ணசாமிக்கு மன்மோகன் ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேல் கம்பு குத்தால் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆறுதல் கூறி பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கிருஷ்ணசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தாங்கள் சில விஷமிகளால் தாக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
கடவுள் அருளால் தாங்கள் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதையும், நல்ல மருத்துவ சிகிச்சை தங்களுக்கு அளிக்கப்படுவதையும் அறிந்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
மேலும், கிருஷ்ணசாமியின் மகனான காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் விஷ்ணுபிரசாத்தையும், பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications