சேலம் ரயில்வே கோட்டம்- கேரளாவில் பாஜக பந்த்
திருவனந்தபுரம்: பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவை உள்ளிட்ட பகுதிகளை பிரித்தது கண்டித்து இன்று கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட பந்த்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளை பிரித்து தமிழகத்தில் இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமை தாங்க, முதல்வர் கருணாநிதி புதிதாக சேலம் ரயில்வே கோட்டத்தை துவக்கி வைக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள பாஜக சார்பில் அம்மாநிலம் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பந்த்தால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவும் இயங்கவில்லை.
இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வந்ததால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.