கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி: ஆடு மேய்த்த தகராறில் விவசாயியை கொன்ற தந்தை மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள பரமன்பச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் கடற்கரை. இவருக்கு சொந்தமான பருத்திக் காட்டில் மேலமங்கலத்தை சேர்ந்த ராமசாமி என்பவரது ஆடுகள் மேய்ந்தன.
இதைப் பார்த்த கடற்கரை ஆடுகளை விரட்டியடித்ததுடன், ராமசாமியிடம் உன் ஆடுகள் எப்படி என் தோட்டத்தில் மேயலாம் என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமசாமியும் அவரது மகன் ராமையாவும் சேர்ந்து கடற்கரையை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து பசுவந்தனை போலீசார் விசாரணை நடத்தி தந்தை-மகன் இருவர் மீதும் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்தாஸ், குற்றவாளிகளான தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications