போதையில் டிரைவரை தாக்கிய 3 போலீசார் கைது!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: குடி போதையில் திமுக பிரமுகரின் கார் டிரைவரை தாக்கிய 3 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியை சேர்ந்தவர் காஜாமலை விஜய். திமுக பிரமுகரான இவர் தனது காரில் டிரைவருடன் திருச்சி ரயில்வே நிலையம் அருகில் உள்ள ஒரு மதுபான கடை முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படையை சேர்ந்த 4 போலீசார், நன்றாக குடித்துவிடடு காஜாமலை விஜய்யையும், அவரது கார் டிரைவரையும் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து தாக்குதலில் ஈடுபட்ட 3 காவலர்களையும் கைது செய்தனர்.
போலீசார் தாக்கியதில் காயமடைந்த விஜய் மற்றும் அவரது கார் டிரைவர் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications