திருப்பதி, ஊட்டி-கொடையில் மக்கள் கூட்டம்
திருப்பதி: தீபாவளியையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தீபாவளி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த விடுமுறை தினங்களால் நாடு முழுவதுமே சுற்றுலாத் தலங்களிலும் முக்கிய புனிதத் தலங்களிலும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
ஊட்டி-கொடையில் பயணிகள் கூட்டம்:
அதேபோல ஊட்டிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
ஊட்டியில் தற்போது 2வது சீசன் நடந்து வருகிறது.
தாவரவியல் பூங்கா, பைகாரா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் அலை மோதுகின்றனர்.
அதிகாலையில் கடும் குளிர் நிலவி வந்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் குளிரை அனுபவித்து ரசிக்கின்றனர்.
கூட்டம் அதிகம் இருப்பதால் ஊட்டிக்கு பல்வேறு ஊர்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலிலும் இதே போன்ற நிலை தான் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications