நள்ளிரவில் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி

Subscribe to Oneindia Tamil

Ramki with Nandini Naveenமதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுராந்தகத்தை அடுத்துள்ள கருங்குழியைச் சேர்ந்த பூபாலனின் மகன் ராம்கி (10). 5ம் வகுப்பு படித்து வந்தான்.

பூபாலனின் அக்கா குழந்தைகளான நந்தினி(5) மற்றும் நவீன்(3) ஆகியோருடன் ராம்கி தூங்கிக் கொண்டிருந்தான்.

அப்போது நள்ளிரவில் விஷப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது. தூக்கத்தில் நந்தினியின் கால் பாம்பின் மீது பட்டதும் பாம்பு நந்தினியின் காலை கொத்திவிட்டது. பாம்பு கொத்தியதால் அலறிய நந்தினியின் சத்தம் கேட்டு ராம்கியும், நவீனும அலறியடித்துக் கொண்டு எழுந்துள்ளனர்.

அவர்களையும் பாம்பு கொத்தியது. இதனால் குழந்தைகள் 3 பேரும் கூச்சலிட்டனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்கள் வந்து பார்த்தபோது, கொத்திய பாம்பு வீட்டை விட்டு வெளியேறி புதருக்குள் மறைந்து விட்டது.

பாம்பு கொத்தியதில் நந்தினி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற இருவரையும் காப்பாற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பலியாகிவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+