பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார் தீக்சித் - ராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவல்

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இப்படையின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். இவர் தற்போது பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'Intervention in Sri Lanka' என்ற நூலை சிங் எழுதியுள்ளார். இதில், இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்தபோது சந்தித்த அனுபவங்களை அவர் எழுதியுள்ளார்.
அதில் முக்கிய விஷயமாக, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டி விடுமாறு தன்னிடம் அப்போதைய இந்தியத் தூதர் ஜே.என்.தீக்சித் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் தான் மறுத்து விட்டதாகவும் ஹர்கிரத் சிங் கூறியுள்ளார்.
தீக்சித் குறித்து தான் வெளியிட்டுள்ள பரபரப்புத் தகவல் குறித்து ஹர்கிரத் சிங் கூறுகையில், அமைதி காக்கும் படையின் தலைவராக நான் இருந்தபோது, 1987ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி என்னை தீக்சித் போன் மூலம் தொடர்பு கொண்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன், இந்திய அரசு பேச்சுவார்த்தைளை மேற்கொண்டிருந்த நேரம் அது. என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தீக்சித், நீங்கள் பிரபாகரனை நாளை சந்தித்துப் பேசச் செல்லும்போது, அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார் தீக்சித்.
ஆனால் அதை நான் உடனடியாக மறுத்து விட்டேன். இது கோழைத்தனமான, முதுகில் குத்தும் செயல் என்பதாலும், இந்திய ராணுவத்தின் பெயர் உலகளவில் கெட்டு விடும் என்பதாலும் இதை ஏற்க நான் மறுத்து விட்டேன்.
பின்னர் ராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் இதுகுறித்து ஆலோசித்தபோது, அவர்களும் எனது கருத்தையே பிரதிபலித்தனர் என்றார் சிங்.
தன்னைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டது குறித்து பிரபாகரனுக்குத் தெரியுமா என்று கேட்டபோது, ஒரு வேளை பின்னர் அவருக்குத் தெரிய வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் சிங்.
பிரபாகரனைக் கொல்ல இந்தியத் தூதர் உத்தரவிட்டதை அறிந்துதான், பழிக்குப் பழியாக ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் சிங்.
இந்தியத் தூதராக இருந்த தீக்சித், பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டதாக, முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள இத்தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.என். தீக்சித் தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications