நீதிபதிகள் எல்லை தாண்டி செயல்படக் கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: நீதிபதிகள் தங்களது எல்லையைத் தாண்டி செயல்படக் கூடாது. அரசு நிர்வாகத்தை நடத்த முயலக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பை அளித்தது. அதில், ஹரியாணா சுற்றுலா வளர்ச்சிக் கழம் நடத்தி வரும் கோல்ப் கிளப்பில், ஒரு டிராக்டர் டிரைவர் பதவியை உருவாக்கி, அதில் 2 தோட்டக்காரர்களுக்கு டிரைவர் வேலை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹரியாணா சுற்றுலா வளர்ச்சிக் கழகம், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.மாத்தூர், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
நீதிபதிகள் கூறுகையில், நீதிபதிகள் தங்களது எல்லையை உணர வேண்டும். அரசாங்கத்தை நடத்த நினைக்கக் கூடாது. நாடு முழுவதும் பல்வேறு நீதிபதிகள் இதுபோல எல்லை மீறி நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
நர்சரி பள்ளி அட்மிஷனை முறைப்படுத்துவது, ஆட்டோ ரிக்ஷாக்களில் கூடுதல் கட்டணம் கேட்பதைக் கண்டிப்பது போன்றவற்றில் எல்லாம் தலையிடும் அளவுக்கு நீதிபதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவறானது மட்டுமல்லாமல் சட்ட விரோதமானதும் கூட. நீதித்துறை நடவடிக்கை என்ற பெயரில் நீதிபதிகள் தங்களது எல்லையைத் தாண்டி செயல்பட முடியாது. அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலைகளை இவர்கள் செய்யக் கூடாது.
டெல்லியில் சாலைகளில் உள்ள ஸ்பீட் பிரேக்கர்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்ப்பு கூறுகிறார்கள். பள்ளிகளில் இலவச சீட்களின் எண்ணிக்கை, தகுதி குறித்தும் தீர்ப்பு கூறுகிறார்கள். இதெல்லாம் நீதிபதிகள் செய்ய வேண்டிய வேலை அல்ல.
ஒரு சட்டம் என்று இருந்தால் அதை அமல்படுத்த நீதிபதிகள் வலியுறுத்தலாம், முனையலாம். ஆனால் நீதிபதிகளே ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி, அதை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கூறினர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications