நீதிபதிகள் எல்லை தாண்டி செயல்படக் கூடாது: உச்சநீதிமன்றம்
டெல்லி: நீதிபதிகள் தங்களது எல்லையைத் தாண்டி செயல்படக் கூடாது. அரசு நிர்வாகத்தை நடத்த முயலக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பை அளித்தது. அதில், ஹரியாணா சுற்றுலா வளர்ச்சிக் கழம் நடத்தி வரும் கோல்ப் கிளப்பில், ஒரு டிராக்டர் டிரைவர் பதவியை உருவாக்கி, அதில் 2 தோட்டக்காரர்களுக்கு டிரைவர் வேலை தர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹரியாணா சுற்றுலா வளர்ச்சிக் கழகம், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.மாத்தூர், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
நீதிபதிகள் கூறுகையில், நீதிபதிகள் தங்களது எல்லையை உணர வேண்டும். அரசாங்கத்தை நடத்த நினைக்கக் கூடாது. நாடு முழுவதும் பல்வேறு நீதிபதிகள் இதுபோல எல்லை மீறி நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
நர்சரி பள்ளி அட்மிஷனை முறைப்படுத்துவது, ஆட்டோ ரிக்ஷாக்களில் கூடுதல் கட்டணம் கேட்பதைக் கண்டிப்பது போன்றவற்றில் எல்லாம் தலையிடும் அளவுக்கு நீதிபதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவறானது மட்டுமல்லாமல் சட்ட விரோதமானதும் கூட. நீதித்துறை நடவடிக்கை என்ற பெயரில் நீதிபதிகள் தங்களது எல்லையைத் தாண்டி செயல்பட முடியாது. அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலைகளை இவர்கள் செய்யக் கூடாது.
டெல்லியில் சாலைகளில் உள்ள ஸ்பீட் பிரேக்கர்களின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்ப்பு கூறுகிறார்கள். பள்ளிகளில் இலவச சீட்களின் எண்ணிக்கை, தகுதி குறித்தும் தீர்ப்பு கூறுகிறார்கள். இதெல்லாம் நீதிபதிகள் செய்ய வேண்டிய வேலை அல்ல.
ஒரு சட்டம் என்று இருந்தால் அதை அமல்படுத்த நீதிபதிகள் வலியுறுத்தலாம், முனையலாம். ஆனால் நீதிபதிகளே ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி, அதை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கூறினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications