எஸ்.ஐயை சுட்டுக் கொல்ல முயன்ற ரவுடி சுயம்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகுவிளை பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. தற்போது பால் பண்னை அருகே உள்ள டேனியல் தெருவில் வசித்து வருகிறார். ரவுடி லிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.
இவர் மீது கொலை, பணம் பறிப்பு, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. இதனால் ரவுடிகள் பட்டியலில் இவர் பெயர் உள்ளது.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாலை புதுக்குடியிருப்பு பிஸ்லரி ரோட்டில் நடந்து வந்த மணிகண்டன் என்பவரை கத்தியை காடடி மிரட்டி ரூ.150 கேட்டுள்ளார். இதுகுறித்து வடசேரி இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
நேற்று இரவு வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் சந்தை அருகே நின்று கொண்டிருந்த சுயம்புவை கைது செய்ய சென்றார். அப்போது சுயம்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்து சுடுவதற்காக பாய்ந்தார். சுதாரித்து கொண்ட எஸ்.ஐ ரிவால்வரை கால்களால் தட்டி விட்டார்.
உடனடியாக மற்ற போலீசார் உதவியுடன் சுயம்புவை மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட சுயம்புவிடம் இருந்து ரிவால்வார் மற்றும் அவர் வைத்திருந்த 16 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications