கன்னியாகுமரியில் கடல் சீறியது-அச்சத்தில் மக்கள்

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியின் மூன்றாவது ஆண்டு தினம் இன்று அச்சத்துடன் நினைவுகூறப்பட்டு வரும் நிலையில் இந்த கடல் சீற்றத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் எழுந்ததில் குமரி மாவட்டம் மேல மணக்குடி பகுதியில் கரையில் நிறுத்திப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. அவற்றை மீனவர்கள் இழுத்து வந்தனர்.
தென்கொரிய கடலிலும் சீற்றம்-கப்பல் மூழ்கியது:
இந் நிலையில் தென் கொரிய கடல் பகுதியிலும் பயங்கர கடல் கொந்தளிப்பு நிலவுவதாக தகவல்கள் வருகின்றன.
தென்கொரியாவின் தெற்கு கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த கடல் கொந்தளிப்பில் ஈஸ்டன் பிரைட் என்ற சரக்குக் கப்பல் மூழ்கியது. தைவான் நாட்டில் இருந்து புறப்பட்ட இந்த கப்பலில் 2,000 டன் நைட்ரிக் அமிலம் இருந்தது.
இந்தக் கப்பலில் இருந்து வந்த அவசரகால சமிஞையை அடுத்து தென் கொரிய கடற்படையினரும் ஹெலிகாப்டர்களும் தேடும் பணியில் ஈடுபட்டன. ஆனாலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. கப்பலில் இருந்த 12 தென் கொரியர்களும் 2 மியான்மர் நாட்டினரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications