கீழக்கரையில் அதிகரிக்கும் போலி டாக்டர்கள்-பாமக
Subscribe to Oneindia Tamil
கீழக்கரை: கீழக்கரையில் போலி டாக்டர்கள் அதிகரித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியில் கீழக்கரை நகரச் செயலாளர் அண்ணாவி (எ) பதிரத்தமாள் நிருபர்களிடம் கூறியதாவது:
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலி டாக்டர்கள் அதிகரித்துள்ளனர். ரத்த பரிசோதனை நிலையம் வைத்திருப்போர் எல்லாம் மருத்துவம் பார்க்கின்றனர்.
அவர்கள், ஏழை மக்களுக்கு தவறான மருந்துகளை கொடுத்து அவதிப்பட வைக்கின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதேபோல ஏர்வாடி, மாயகுளம், சிக்கல் போன்ற ஊர்களிலும் போலி டாக்டர்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications