மெட்ரோ ரயில் திட்டம்-ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்
சென்னை: சென்னையில் ரூ. 9,757 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது
சென்னை மாநகர் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இப்பகுதியின் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கு உடனடியான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
சென்னை போக்குவரத்துத் தேவையை கருத்தில் கொண்டு ரூ. 9,757 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.
சென்னைத் துறைமுகத்திற்கான சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,468 கோடி மதிப்பீட்டில் மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு உயர்த்தப்பட்ட வேக வழித்தடம் (மேம்பால சாலை) ஒன்றை அமைக்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில், வெளிநாடுகளில் பல நகரங்களில் உள்ளது போல மாநகரின் முக்கியச் சாலைகளை இணைக்கும் அதிவேக வட்டச்சாலை அமைக்கக் கருதப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து வீடுகளிலும் கலர் டிவி:
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 24 லட்சத்து 58 ஆயிரத்து 411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்டமாக, 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான் என்ற சாதனையை விரைவில் எட்டுவோம் என கூறப்பட்டுள்ளது.
-
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம்












Click it and Unblock the Notifications