For Daily Alerts
Just In
மின் கம்பத்தில் வேன் மோதி தீ-8 பேர் பலி
மங்களூர்: மங்களூர் அருகே வேன் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி இறந்தனர்.
பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் வேனில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த வேன் கள்ளப்பு என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். வேன் டிரைவர் உட்பட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வேன் முழுவதும் எரிந்து உருக்குலைந்தது.
இந்த விபத்தால் மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Comments
Story first published: Saturday, January 26, 2008, 15:34 [IST]