For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின் கம்பத்தில் வேன் மோதி தீ-8 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News


மங்களூர்: மங்களூர் அருகே வேன் ஒன்று மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி இறந்தனர்.

பீகாரைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் வேனில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் பயணித்த வேன் கள்ளப்பு என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி தீப்பிடித்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர். வேன் டிரைவர் உட்பட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் வேன் முழுவதும் எரிந்து உருக்குலைந்தது.

இந்த விபத்தால் மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X