யூதர்கள் குறித்த விமர்சனம்: அமைதி அமைப்பிலிருந்து காந்தி பேரன் ராஜினாமா
வாஷிங்டன்: யூதர்களும், இஸ்ரேலியர்களும்தான் உலகத்தில் வன்முறைக் கலாச்சாரம் உருவாக முக்கிய காரணம் என தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தின் எம்.கே.காந்தி அமைதிக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி விலகியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி. இவர் ரோசஸ்டெர் பல்கலைக்கழகத்தின் எம்.கே. காந்தி அமைதி கழகத்தின் தலைவராக இருந்து வந்தார். இந்தக் கழகத்தை நிறுவியவரே அருண் காந்திதான்.
கடந்த 7ம் தேதி இவர் இணையதள பிளாக் ஒன்றில், உலக அளவில் வன்முறைக் கலாச்சாரம் பெரிய அளவில் பரவ யூதர்களும், இஸ்ரேலும்தான் முக்கிய காரணம் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், எனது கருத்துக்கு எதிராக எழுந்துள்ள கருத்துக்கள், மகாத்மா காந்தி போதித்த அகிம்சையைப் புரிந்து கொள்ளாததால் வந்தது. வன்முறைக் கலாச்சாரத்திற்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே எனது கட்டுரை அமைந்திருந்தது.
வேறு எந்த உள்நோக்கமும் என்னிடம் இல்லை. ஆனால் எனது கருத்துக்கள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக உணர்கிறேன். எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
washingtonpost.com இணையதளத்தின் பிளாக் ஒன்றில்தான் அருண் காந்தியின் கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில், ஹோலோகாஸ்ட் அனுபவத்துக்குப் பின்னர், அன்று நடந்த கொடுமைகளுக்குப் பழிக்குப் பழி வாங்கும் வகையில் யூதர்கள் இன்று செயல்படுவதாக தெரிகிறது.
யூதர்களின் தேசமான இஸ்ரேல் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும்தான் அதிகம் நம்பியுள்ளது. எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ள அது தயங்குகிறது.
உலகத்தில் வன்முறைக் கலாச்சாரம் வேகமாக பரவ இவர்களும் முக்கியக் காரணம் என்று கூறியிருந்தார் காந்தி.
அமெரிக்காவின் டென்னஸ்ஸியில், கடந்த 1991ம் ஆண்டு எம்.கே.காந்தி அமைதிக் கழகத்தை ஏற்படுத்தினார் அருண் காந்தி. பின்னர் இது ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது.
மகாத்மா காந்தியின் 2வது மகன் மணிலாலின் மகன்தான் அருண் காந்தி. மகாத்மா காந்திக்கு இவர் 5வது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications