நாடு முழுவதும் சமையல் கேஸ் கடும் தட்டுப்பாடு!!

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர்களுக்கு சமீப காலமாக தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. விநியோக் குறைவும், பயன்பாடு அதிகரிப்புமே இதற்குக் காரணம்.
இருப்பினும், ஹோட்டல்கள், சிறு உணவு விடுதிகளை நடத்துவோர் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்களைத்தான் பயன்படுத்துகின்றனர். கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து இவர்கள் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாங்கி விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படுவதாக மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு பெருமளவில் அதிகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதால், மக்கள் அதிக அளவில் சிலிண்டர் கேட்டு புக் செய்வதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது பெரும் சிரமமமாக உள்ளது. சிலிண்டர் கேட்டு ஏஜென்சியில் புக் செய்தால் குறைந்தது 20 நாட்கள் கழித்துத்தான் கிடைக்கிறது. சில நேரங்களில் இது 30 நாட்கள் வரை கூட ஆவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் 10 நாட்கள் கழித்து கிடைத்து வந்த காஸ் சிலிண்டர்கள் தற்போது 15 நாட்களாக அதிகரித்துள்ளது.
இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்போருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு சிலிண்டர் இணைப்பை மட்டும் பெற்றிருப்போரின் நிலைதான் மகா அவலமாக உள்ளது.
சிலிண்டர் தீர்ந்த பின்னர் அவர்கள் சமையலுக்கு படும் பாடு பெரும் பாடாக உள்ளது.
இந்த நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் சப்ளையை அதிகரிக்குமாறு எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், இன்னும் சில நாட்களில் நிலைமை சரியாகி விடும். அதன் பின்னர் காஸ் பற்றாக்குறை இருக்காது என்றார் அவர்.
தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தராஞ்சல், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications