நெல்லை அருகே நீரில் விழுந்து சிறுவன் பலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே கொதிக்கும் நீரில் விழுந்து 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தான்.

நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்-சவுந்தரி தம்பதியின் மகன் பவுல்(4). நேற்று முன்தினம் சவுந்தரி ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி வைத்துவிட்டு கடைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பவுல் எதிர்பாராத விதமாக வென்னீரில் தவறி விழுந்து அலறி துடித்தான்.

சத்தம் கேட்டு ஓடிவந்த சவுந்திரி மற்றும் உறவினர்கள் உடல் வெந்தநிலையில் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பவுல் பரிதாபமாக இறந்து விட்டான். இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+